நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஏமாற்றம் அளித்த படம் 'குமாரி'. இந்த படத்தை அவர் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை வீண் போனது. நீண்டு கொண்டே செல்லும் கதை, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தில் எம்ஜிஆருடன், மாதுரி தேவி, ஸ்ரீரஞ்சனி, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். துரைராஜ், கே.எஸ். அங்கமுத்து, சி.டி. ராஜகாந்தம் மற்றும் புலிமூட்டை' ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பத்மநாபன் இயக்கினார். காட்டுக்குள் தன்னால் காப்பாற்றப்பட்ட ஒரு இளவரசியை மணப்பதற்காக அவளின் அரண்மனைக்கே சென்று அதை சாதிக்கும் ஒரு இளைஞனின் கதை. கே.வி.மகாதேவன் இசையமைத்தார், டி. மார்கோனி ஒளிப்பதிவு செய்தார்.




