கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஏமாற்றம் அளித்த படம் 'குமாரி'. இந்த படத்தை அவர் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை வீண் போனது. நீண்டு கொண்டே செல்லும் கதை, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தில் எம்ஜிஆருடன், மாதுரி தேவி, ஸ்ரீரஞ்சனி, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். துரைராஜ், கே.எஸ். அங்கமுத்து, சி.டி. ராஜகாந்தம் மற்றும் புலிமூட்டை' ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பத்மநாபன் இயக்கினார். காட்டுக்குள் தன்னால் காப்பாற்றப்பட்ட ஒரு இளவரசியை மணப்பதற்காக அவளின் அரண்மனைக்கே சென்று அதை சாதிக்கும் ஒரு இளைஞனின் கதை. கே.வி.மகாதேவன் இசையமைத்தார், டி. மார்கோனி ஒளிப்பதிவு செய்தார்.