வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

குலதெய்வம் ராஜகோபால் என்ற நடிகர் ஓரளவிற்கு அனைவருக்கும் தெரிந்தவர்தான். 100 படங்களுக்கு மேல் நடித்த அவர் தனது கடைசி காலத்தில் வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தித்தான் தனது குடும்பதை காப்பாற்றினார்.
நாடகத்தில் நடித்து வந்த ராஜகோபால் 1956ம் ஆண்டு வெளிவந்த குலதெய்வம் படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக நடித்தார். அன்று முதல் 'குலதெய்வம்' ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார். கதையின் நாயகன், இரண்டாவது நாயகன், வில்லன், குணசித்தர வேடங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்தார்.
ஒரு கட்டத்தில் படம் தயாரிக்க விரும்பிய ராஜகோபால் அதுவரை தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் போட்டு டி. ஆர். மகாலிங்கத்தை கதாநாயகனாக நடிக்க வைத்து, "பண்ணையார் மகன்", "கனவு பலித்ததம்மா" ஆகிய படங்களை, தயாரித்தார். இதில் கடனாளி ஆகி, படங்களும் முழுவதும் முடிந்தும், திரையிட முடியாமல், பெரும் இழப்பை சந்தித்தார். பல ஆண்டுகள் நடிப்புத் துறையில் இருந்து விலகி இருந்தார்.
பின்பு, வில்லுப்பாட்டுக் கலையை, கையிலெடுத்து, மீனாட்சி கல்யாணம், ஐயப்பன் சரிதம், திருமுருகன் ஆறுபடை சரிதம், மகாகணபதி சரிதம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு, கலைவாணர் வரலாறு, காத்தவராயன் கதை, முனீஸ்வரன் கதை, ஐயனார் கதை, அகோர வீரபத்திரர் கதை, கருப்பர் கதை, காலபைரவர் கதை உள்பட பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி, தனது குடும்பத்தைக் காப்பாற்றினார்.
பின்னர் புயல் கடந்த பூமி, படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து, வீடு மனைவி மக்கள், வாய்ச்சொல்லில் வீரனடி, பெண்மணி அவள் கண்மணி , எங்க வீட்டு வேலன், எங்க சின்ன ராசா, பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிரரோ தாவணிக் கனவுகள், ஆகிய படங்களில் நடித்தார்.




