பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா |
மஞ்சும்மல் பாய்ஸ் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் சிதம்பரம். அடுத்து தனுஷை வைத்து படம் இயக்கப்போகிறார். கமலுடன் இணையப்போகிறார் என பேச்சு வந்தது. அது நடக்கவில்லை. இப்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து அந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு பாலன்.
திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. "பாலன்" திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது என்பதால் இது மலையாள படம், தமிழிலும் வரும் என தெரிகிறது. யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படம், தமிழில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் ஹிந்தியில் பிரியதர்ஷனின் திரில்லர் திரைப்படம் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
பாலன் படம் தலைப்புக்கு ஏற்ப அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதை. அதில் நடிப்பவர்கள் புதுமுகங்கள், மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஆவேஷம் படத்தின் கதாசிரியர் ஜீத்து மாதவன் இந்த படத்துக்கும் கதை எழுதியிருக்கிறார்.