ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த அவர் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். புகழின் உச்சியில் இருக்கும்போது தானே சொந்தமாக படங்களை தயாரிக்கும் முடிவுடன் 'ஸ்ரீசுகுமாரன் புரோடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 'மச்சரேகை 'என்ற படத்தை தயாரித்தார். அது சுமாராக ஓடியது. அதனையடுத்து 'விளையாட்டு பொம்மை' படத்தை தயாரித்தார். அதுவும் அவருக்கு பலன் தரவில்லை.
அடுத்து தானே 'சின்னத்துரை' என்ற படத்தை இயக்கினார். அதுதான் அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வழுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய 'இருமன கன்னிகள்' என்ற நாவலை திரைப்படமாக்கினார். இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதை.
இதில் அவருடன் எஸ்.வரலக்ஷ்மி, பி.ஆர்.பந்துலு, டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, ஜே.பி.சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எஸ்.ஆர்.வரலட்சுமி, கே.சயீராம், 'ஸ்டண்ட்' சோமு, 'ஜெயக்கொடி' கே.நடராஜன், கே.எஸ்.ஹரிஹரன், ராமையா சாஸ்திரி, கே.ராமு, வேணுபாய், கே.எஸ்.அங்கமுத்து மற்றும் சி.ஆர்.ராஜகுமாரி, சௌதாமினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
இந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் தன் சொத்துக்களை இழந்தார். அடுத்துவந்த நான்கு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 'மாலையிட்ட மங்கை' படத்தின் மூலமாக திரையுலகில் மீண்டு வந்தார். அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜியின் காலம் வரை நடித்துக் கொண்டிருந்தார்.