ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
ஒரு காலத்தில் ஓஹோவென இருக்கும் நடிகர்கள் பின்னர் மார்க்கெட் இழந்தோ அல்லது வேறு காரணங்களுக்காகவே சினிமாவை விட்டு விலகி இருந்து பின்னர் நடிக்க வருவதை ரீ என்ட்ரி என்பார்கள். சமீபத்தில் மோகன் 'ஹரா' என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதேபோன்று முதன் முதலாக ரீ என்ட்ரி கொடுத்து சாதித்தவர் டி.ஆர்.மகாலிங்கம்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் தென்கரையில் 1924 ஜூன் 16ம் தேதி பிறந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். கோவிலில் பஜனை பாடல்களை பாடிவந்த மகாலிங்கம், ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் 13 வயதில் 'நந்தகுமார்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு அதே ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் மூலமாகவே 'ஸ்ரீவள்ளி' படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் பெரிய வெற்றி பெறவே அடுத்தடுத்து 39 படங்களில் நடித்து உச்சத்துக்குச் சென்றார். 1977 வரை திரையுலகிலும் நாடக அரங்கிலும் தனித்த புகழோடு இயங்கினார்.
ஒரு கட்டத்தில் சில கசப்பான அனுபவங்கள் காரணமாக சினிமாவை விட்டு விலகி சொந்த ஊருக்கே சென்று விட்டார். பின்னர் அவர் 'வள்ளி திருமணம்' நாடகத்தை நாடு முழுக்க நடத்தினார். 4 வருடங்களுக்கு பிறகு1959ல் 'மாலையிட்ட மங்கை' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தயாரித்த கவியரசர் கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்தை வற்புறுத்தி நடிக்க வைத்தார். இந்த படமும் வெற்றி பெறவே தனது ரீ என்ட்ரியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் டி.ஆர் மகாலிங்கம்.
திருவிளையாடல், அகத்தியர், திரு நீலகண்டர், ராஜராஜசோழன், திருமலை தெய்வம் உள்ளிட்ட பல படங்கள் மகாலிங்கம் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு நடித்த முக்கியமான படங்கள்.