தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்ற பிறகு ஆஸ்கரின் கவனம் இந்திய சினிமாவின் பக்கம் திரும்பியது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய கலைஞர்களும் ஆஸ்கர் விருது பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுகளை தீர்மானிக்கும் ஆஸ்கர் அகாடமி கமிட்டியில் தற்போது 487 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
புதிய உறுப்பினர் பட்டியலில் இயக்குனர் ராஜமவுலி, நடிகை ஷபனா ஆஸ்மி, 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரஷீத், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் ராஜமவுலி மனைவி ரமா, ரிமா தாஸ் உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற 19 பேரும், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேரும் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
புதிய உறுப்பினர்களையும் சேர்த்து ஆஸ்கார் அகாடமியில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் 56 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் அகாடமியில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.