ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

இப்போதெல்லாம் ஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடுவதும், பல கோடி வசூல் என்று போலி விளம்பரம் செய்வதும் அதிகரித்துள்ளது. இது மலையாள சினிமாவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படம் 200 கோடிக்கு மேல் வசூலித்ததாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே விளம்பரம் செய்தது. ஆனால் சிராஜ் என்பவர் “நான் இந்த படத்தின் தயாரிப்புக்கு 7 கோடி கொடுத்தேன், 200 வசூலித்தவர்கள் என் பணத்தை திருப்பித் தரவில்லை” என்று புகார் அளித்தார்.
இதனால் தற்போது அமலாக்கத்துறையினர் மலையாள சினிமாக்களின் உண்மையான வரவு, செலவை கண்காணிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மலையாள தயாரிப்பாளர் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு ரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் “பாக்ஸ் ஆபீஸ் வசூலை அதிகரித்துக் காட்டி, ஒட்டுமொத்த திரைப்பட துறைக்கும் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற நடைமுறையில் ஈடுபட வேண்டாம். சில தயாரிப்பாளர்கள் படம் வெளியான சில நாட்களுக்கு பல்க் புக்கிங் செய்து, பார்வையாளர்களை கவர பொய்யான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணத்துக்காக பொய்யான திரைவிமர்சனங்களை வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.