இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானது 2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான். அதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்.. வரும் டிச-2ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. அதற்காக வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள். இது சமபந்தமான புகைப்படங்களுடன் படத்தில் தான் நடித்துள்ள சில புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.