நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று காரணமாக நேற்று காலமானார். நடனம் மட்டும் அல்லாமல் ஒரு நகைச்சுவை நடிகராகவும் இன்றைய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவசங்கர். குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடிக்கும்.. அஜித் நடித்த வரலாறு படத்தில் அவரை பரதநாட்டிய கலைஞராக, சற்றே நளினமான பெண் தன்மை கொண்ட ஒரு மனிதராக மிக வித்தியாசமாக காட்டியதில் சிவசங்கரின் பங்கு மிக அதிகம்.. அந்தப்படத்தில் சிவசங்கரின் பங்களிப்பு குறித்து தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
“இந்தப்படத்தில் அஜித்தின் மூன்று கதாபாத்திரங்களில் பரதநாட்டிய கலைஞர் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது இதை நான் சரியாக செய்ய முடியுமா, திரையில் பார்க்கும்போது இது வேறுவிதமாக தெரிந்துவிடாதே என கொஞ்சம் தயங்கினார் அஜித். அப்போது நான் அவரிடம் சிவசங்கர் மாஸ்டரை நம்பி இதை தாரளமாக செய்யலாம் என கூறினேன்.
இந்தப்படத்தின் கதாபாத்திரம் போலவே, பரதநாட்டியத்தின் காரணமாக அவரை அறியாமலேயே அந்த பெண் தன்மை வந்துவிட்டது என்றும் ஆனால் சிவசங்கருக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்றும் கூறினேன். அவர் மீதுள்ள மரியாதை காரணமாகவே அந்தப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு சிவசங்கர் என பெயரும் வைத்தேன்.
இந்தப்படத்தில் அஜித்தின் நடை உடை பாவனைகளை அழகாக வடிவமைத்து கொடுத்தார் சிவசங்கர். அதுமட்டுமல்ல, இந்த அஜித் கதாபாத்திரத்தை வைத்து ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியபோது, ஒவ்வொரு எதிரியையும் அஜித் அடித்து வீழ்த்தும்போது ஒவ்வொருவிதமான நடன முத்திரையை போஸாக காட்டுவது போல வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்கு பொருத்தமாக அந்த சண்டைக்காட்சியில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்தார் சிவசங்கர் மாஸ்டர். தியேட்டரில் அந்த சண்டைக்காட்சிக்கு ரசிகர்களின் கைதட்டல் அதிகம் கிடைத்தது” என கூறியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.