விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர் தோழி பலியானார். இவர் நடக்க முடியாத சூழலில் இரு ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில் நடக்க பயிற்சி எடுத்தவர், சில தினங்களுக்கு முன் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றார். 4 மாதங்களுக்கு பின் பொது வெளியில் அவர் வந்தார். கையில் ஊன்றுகோல் துணையுடன் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய யாஷிகா : ‛‛இப்போது உடல்நிலை பரவாயில்லை. பழையபடி நடக்க முடியவில்லை என்றாலும் ஓரளவுக்கு நடக்க தொடங்கிவிட்டேன். முழுமையாக குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். பிஸியோ, உடற்பயிற்சி எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எவ்வளவு நாள் தான் படுத்த படுக்கையாக இருப்பது. ஒரு மைண்ட் சேஞ்சிற்காக கடை திறப்பு விழாவில் பங்கேற்றேன். இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ஒரு படத்தில் போலீசாக நடிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட விபத்தால் அந்த படப்பிடிப்பு அப்படியே நின்று உள்ளது. உடல்நிலை தேறிய பிறகு தான் அடுத்த படங்கள் பற்றி யோசிக்க முடியும்'' என்றார்.