நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
காதலை மையப்படுத்தி வந்த படங்கள் ஏராளம். காதலர்களைச் சேர்த்து வைப்பதற்குப் போராடிய படங்களும் நிறைய உண்டு. இந்த இரண்டையும் மையப்படுத்தி வெளிவந்த படம் தான் 'வைதேகி காத்திருந்தாள்'. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் படமென்றால் மென்மையான கதை, வலுவான திரைக்கதை, சிரிக்க வைக்கும் காட்சிகள், சென்டிமெண்ட் சீன்கள், இசைக்கு முக்கியத்துவம் என கலந்துகட்டி இருக்கும். இதுவும் அப்படியான படம் தான்.
தனது அடுத்த படத்திற்கு இளையராஜாவை அணுகினார் ஆர்.சுந்தர்ராஜன். அப்போது இளையராஜா "வெவ்வேறு படங்களுக்கு தயார் செய்த 6 பாட்டு தரேன். அதற்கேற்றவாறு ஒரு கதையை தயார் செய்து கொள்" என்று கூறிவிட்டார். அப்படி பாடலுக்காக உருவான கதை தான் இந்த படம். 'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு', 'இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ', 'மேகம் கருக்கையிலே', 'அழகு மலராட', 'காத்திருந்து காத்திருந்து...' என அத்தனை பாடல்களும் ஹிட்டானது.
ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த்தை பெர்பார்மன்ஸ் ஹீரோவாக அடையாளம் காட்டியது. வெள்ளச்சாமியாக விஜயகாந்த், காதலி வைதேகி ஆக பரிமளா, விதவை வைதேகி ஆக ரேவதி நடித்தனர். கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ஹிட்டானது.
1984ம் ஆண்டு தீபாவளியன்று இப்படம் வெளியானது. தீபாவளிப் படங்களில், நல்ல கதையாலும், சிறப்பான நடிப்பாலும், காமெடியாலும் முக்கியமாக இளையராஜாவின் இசையாலும், வெள்ளிவிழா படமானது.