ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தது : 100 நாள் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விஜய் | ‛குட் நைட்' பட இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் அளித்த பிறந்தநாள் பரிசு | மேலும் மூன்று மொழிகளில் வெளியான ஏஸ் | தக் லைப் - ஓடிடி ரிலீஸ் குறித்து, அன்று பாராட்டு, இன்று அபராதம் | தனுஷின் 5வது 100 கோடி படம் 'குபேரா' | அதிகபட்ச வியாபாரத்தில் 'கூலி' : மீண்டும் ரஜினியின் உச்சம் | சினிமாவிலும் 'போதைப் பொருள்' கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் இயக்குனர்கள் | 48 மணி நேரத்தில் தயாரான படம் | 'ஹரி ஹர வீரமல்லு' ஜூலை 24ல் ரிலீஸ்: உறுதியான அறிவிப்பு | உடன் நடித்த குழந்தைகளின் அம்மாக்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா |
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் படமெடுத்தவர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். அந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து காந்தி வரலாற்றை எடுத்தார். இப்போது திருவள்ளுவர் வரலாற்றை திருக்குறள் என்ற பெயரில் எடுத்துள்ளார். இந்த வாரம் படம் ரிலீஸ்.
இதில் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், தனலட்சுமி வாசுகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் ''இந்த படத்துக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் குமரி வள்ளுவர் சிலை இடம் பெறுகிறது. அதை உருவாக்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன்தான் இப்போது முதல்வர். அவர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இளையராஜா இசை படத்துக்கு பலம்.
திருக்குறள் படத்தில் காதல் காட்சிகள், வசனங்களும் அதிகம் இருக்கிறது. வள்ளுவர் காமத்து பாலையும் எழுதியிருக்கிறார். படத்தில் சில போர்க்கள காட்சியும் இருக்கிறது. இந்த படத்தில் வள்ளுவர் வெள்ளை உடையுடன் இளமையாக வருகிறார். அவர் அப்போது என்ன உடை அணிந்து இருந்தார் என யாருக்கும் தெரியாது. அவர் உடை விஷயத்தில் விவாதம் தேவையில்லை. அவர் சொன்ன நல்ல விஷயங்களை எடுப்போம். பிற்காலத்தில வள்ளுவர் போட்டோவை வரைந்த வேணுகோபால் சர்மாதான் அவருக்கு ஒரு உருவம், உடை கொடுத்தார்'' என்றார்.