பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
'பாட்ஷா, வீரா, சத்யா, அண்ணாமலை' போன்ற வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் சின்னத்திரைக்கு திரும்பினார். இப்போது மீண்டும் படம் இயக்கி உள்ளார். அந்த படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் ஹீரோ, படத்தின் தலைப்பு 'சாருகேசி'. இசை சம்பந்தப்பட்ட கதையான இதில், சத்யராஜ், சமுத்திரகனி, சுஹாசினி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சிந்து பைரவி, சங்கராபரணம் பாணியில் தயாராகிறது. கர்நாடக சங்கீதா பாடகராக ஒய்.ஜி.மகேந்திரன் வருகிறார். இவரின் சாருகேசி என்ற மேடை நாடகமே திரைப்படமாக உருவாகியுள்ளது.
இது குறித்து சுரேஷ்கிருஷ்ணா பேசுகையில், ''ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்துவிட்டு படமாக எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். நானும் அதை சொல்ல, படம் தயாரானது. சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவாவை கமிட் செய்தோம். இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார்.
பா விஜய்யை சமுத்திரகனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன். தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். ஒய் ஜி மகேந்திரன் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது'' என்றார்.