'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு | 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் மம்முட்டி | 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட் | 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஓஜி' ஒரே கதையா : இயக்குனர் பதில் | அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே… | பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு |
1980களில் நிறைய ஹிந்தி படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி, ரஜினி அதிக ரீமேக் படங்களில் நடித்தனர். அரிதாக ஒரு சில தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அது பெரும்பாலும் பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்களாக இருக்கும். இப்படியான சூழலில் சிவகுமார் நடித்த 'உன்னை நான் சந்தித்தேன்' படம் ஹிந்தியில் ரீமேக் ஆனது.
கே.ரங்கராஜ் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், சுஜாதா, சுரேஷ், ரேவதி, மோகன் நடித்தார்கள். இளையராஜா இசையமைத்தார். மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவை தம்பி தயாரித்தார்.
படத்தின் நாயகன் சிவகுமார் மனைவி சுஜாதா மீது அதிகமாக சந்தேகப்படுவார். இந்த சந்தேக புத்தியால் பாதிக்கப்படும் சுஜாதா வீட்டை விட்டு ஓடி விடுவார். 20 வருடங்களுக்கு பிறகு சிவகுமார் மனைவியை மீண்டும் சந்திக்கிறார். அப்போது அவருக்கு திருமணமாகி ரேவதி மகளாக இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்த படம் தமிழில் பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தியில் 'சிந்தூர்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. சிவகுமார் நடித்த கேரக்டரில் சசிகபூர் நடித்தார், சுஜாதா நடித்த கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். தெலுங்கில் 'சுமங்கலி' என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது.