முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் |
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி தேசத்திற்கு பெருமை சேர்த்தார். அவருக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்த இளையராஜா அவரிடம் வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜா, இசையமைப்பாளராக அறிமுகமான ‛அன்னக்கிளி' படத்தின் நாயகனான பிரபல நடிகர் சிவகுமார், சென்னையில் இளையராஜாவை நேரில் சந்தித்து சிம்பொனி இசைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தங்கச்சங்கிலியும் அணிவித்து கவுரவப்படுத்தினார். அவருடன் சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா, மகளும், பாடகியுமான பிருந்தாவும் உடன் சென்று வாழ்த்தினர்.