ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்குத் திரையுலகினருக்காக 'நந்தி விருதுகள்' வழஙகப்பட்டு வந்தது. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலமாகப் பிரிந்த பிறகு விருதுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா அரசு 'கட்டார்' விருதுகள் என தெலுங்குத் திரையுலகத்தினருக்காக புதிய பெயரில் விருதுகளை வழங்குவதாக அறிவித்து, சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல விருதுகளை அறிவித்தார்கள். நேற்று அந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றார்கள். 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசலில் ஒரு பெண் உயரிழந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனையும் கைது செய்தது தெலுங்கானா அரசு. அதனால், இந்த விழாவில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்வாரா என்ற ஒரு சந்தேகம் நிலவியது.
அதையெல்லாம் பொருட்படுத்தால் அல்லு அர்ஜுன் நேற்று நேரில் வந்து விருது பெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, முதல்வர் ரேவந்த் ரெட்டி அடுத்தடுத்து அமர்ந்திருந்ததும் பேசப்பட்டது.