கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா |
மலையாள திரையுலகில் வெளியாகி முதன் முதலில் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த படம் ‛திரிஷ்யம்'. ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக அமைந்த வருண் பிரபாகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோஷன் பஷீர் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கிலும் தன்னுடைய அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்ததை தொடர்ந்து அங்கே கொலம்பஸ், மல்லி பெல்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புதிய படம் ஒன்று முதல் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ரோஷன் பஷீர். அது மட்டுமல்ல மலையாளத்தில் ஹனிரோஸ் நடிப்பில் உருவாகி வரும் ‛ரேச்சல்' மற்றும் தமிழில் உருவாகும் ‛ஆல் பாஸ்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர், தன்னுடைய கதாபாத்திரம் காரணமாக திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தமே என்றும் கூறியுள்ளார்.