கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் | மோகன்லால், மம்முட்டி படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை இயக்க தயாராகும் விஸ்வரூபம் எடிட்டர் | முக்கிய காட்சிகள் கட், பாம்புடன் வந்த ரசிகர் : கலீஜா ரீ ரிலீஸ் கலாட்டா | தமிழ் பாடல்களில் ஆங்கில ஆதிக்கம் : அனுராக் கேள்விக்கு மணிரத்னம் பதில் | கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி | கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு |
தெலுங்குத் திரையுலகினருக்காக ஒன்றுபட்ட ஆந்திர மாநில அரசு வழங்கி வந்த 'நந்தி விருதுகள்' மிகவும் புகழ் பெற்றவை. 1964 முதல் வழங்கப்பட்டு வந்த அந்த விருதுகள் 2016ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் தெலங்கானா, ஆந்திரா என இரண்டாகப் பிரிந்த பின் விருதுகள் வழங்கப்படுவதில்லை.
இந்த ஆண்டு முதல் அந்தத் திரைப்பட விருதுகளை 'கட்டார்' விருதுகள் என்ற பெயரில் வழங்க தெலங்கானா அரசு முடிவு செய்து விருதுகளைப் பெறுபவர்கள் யார் என்பதை அறிவித்துள்ளது. கவிஞர், புரட்சிகர நாட்டுப்புறப் பாடகராக இருந்தவர் 2023ல் மறைந்த கட்டார். அவரது பெயரில்தான் தெலங்கானா மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது.
சீனியர் நடிகையான ஜெயசுதா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் இந்த விருதுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
2024ம் ஆண்டின் சிறந்த படமாக 'கல்கி 2898 ஏடி', படமும், அப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் சிறந்த இயக்குனராகவும் தேர்வாகி உள்ளனர். சிறந்த நடிகராக 'புஷ்பா 2' படத்தில் நடித்த அல்லு அர்ஜுன்', சிறந்த நடிகையாக '35 சின்ன கத காது' படத்தில் நடித்த நிவேதா தாமஸ், சிறந்த துணை நடிகராக 'சரிபோத சனிவாரம்' படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுகளைப் பெற்ற அல்லு அர்ஜுன், நிவேதா தாமஸ், எஸ்ஜே சூர்யா, ஆகியோர் தெலங்கானா மாநில அரசுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.