பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் |
தெலுங்குத் திரையுலகினருக்காக ஒன்றுபட்ட ஆந்திர மாநில அரசு வழங்கி வந்த 'நந்தி விருதுகள்' மிகவும் புகழ் பெற்றவை. 1964 முதல் வழங்கப்பட்டு வந்த அந்த விருதுகள் 2016ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் தெலங்கானா, ஆந்திரா என இரண்டாகப் பிரிந்த பின் விருதுகள் வழங்கப்படுவதில்லை.
இந்த ஆண்டு முதல் அந்தத் திரைப்பட விருதுகளை 'கட்டார்' விருதுகள் என்ற பெயரில் வழங்க தெலங்கானா அரசு முடிவு செய்து விருதுகளைப் பெறுபவர்கள் யார் என்பதை அறிவித்துள்ளது. கவிஞர், புரட்சிகர நாட்டுப்புறப் பாடகராக இருந்தவர் 2023ல் மறைந்த கட்டார். அவரது பெயரில்தான் தெலங்கானா மாநில திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது.
சீனியர் நடிகையான ஜெயசுதா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் இந்த விருதுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
2024ம் ஆண்டின் சிறந்த படமாக 'கல்கி 2898 ஏடி', படமும், அப்படத்தை இயக்கிய நாக் அஷ்வின் சிறந்த இயக்குனராகவும் தேர்வாகி உள்ளனர். சிறந்த நடிகராக 'புஷ்பா 2' படத்தில் நடித்த அல்லு அர்ஜுன்', சிறந்த நடிகையாக '35 சின்ன கத காது' படத்தில் நடித்த நிவேதா தாமஸ், சிறந்த துணை நடிகராக 'சரிபோத சனிவாரம்' படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுகளைப் பெற்ற அல்லு அர்ஜுன், நிவேதா தாமஸ், எஸ்ஜே சூர்யா, ஆகியோர் தெலங்கானா மாநில அரசுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.