என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'தக்லைப்' பட விழாவில் தமிழிலிருந்து கன்னட மொழி உருவானதாக கமல்ஹாசன் பேசிய விவகாரத்தை அந்த மாநிலத்தில உள்ள கன்னட அமைப்புகள் சர்ச்சையாக்கி வருகின்றனர். இது குறித்து தக்லைப் படத்தின் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார் கருத்து சொல்ல வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பெங்களூருவில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சிவராஜ்குமார் பேசும்போது, ''நான் எப்போதுமே கமல் சாரின் தீவிரமான ரசிகன். ஒவ்வொரு தருணத்திலும் அவர் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். அதோடு நம்ம ஊர் பற்றி அவர் அடிக்கடி என்னிடத்தில் பெருமையாக பேசி இருக்கிறார். அவர் என்னைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசியதைதான் அனைவரும் பேசி இருக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு கன்னட மொழி பற்றி பேசுகிறார்கள். அவர் நடித்த பட விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்ததே பெருமையான விஷயம்.
அதோடு நேற்று கூட அவர் இங்கே வந்திருந்தார். அப்போது இதுகுறித்து அவரிடத்தில் நேராகவே கேட்டிருக்கலாம். ஆனால் ஒருவர் கூட அது குறித்து அவரிடத்தில் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் இங்கே அவர் உங்கள் முன்பே அதுகுறித்து பேசி தெளிவுபடுத்தி இருப்பார். அப்போது ஏன் நீங்களெல்லாம் அமைதியாக இருந்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் யாராவது ஒருவர் பேசினால் மட்டும் கன்னட மொழி மீதான உங்களது பாசத்தை வெளிப்படுத்துகிறீர்கள். இந்த பாசமானது எப்போதுமே இருக்க வேண்டும். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டும் மொழியை கொண்டாடாதீர்கள்'' என்று கூறியுள்ளார் சிவராஜ்குமார்.
மேலும், ''தேவைப்பட்டால் கன்னட மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கன்னட பெருமை பேசுவது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் கன்னட சினிமாவுக்காக என்ன செய்துள்ளீர்கள்? புதிய நபருக்கு வாய்ப்பு கொடுத்தீர்களா? கன்னடம் வளர வேண்டுமென்றால் எல்லா வழியிலும் அதை ஆதரிப்பது கடமையாகும். நான் சொல்வது சரியா தவறா என்பதை உங்களது மனசாட்சியை கேட்டு பாருங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும். அதோடு கமல் சார் கன்னட சினிமாவுக்கு நிறைய செய்திருக்கிறார். எப்பொழுதுமே அனைவரையும் மதிக்கக்கூடிய ஒரு நல்ல திரைக்கலைஞர் அவர். எந்த மொழியையும் தவறாக சித்தரிக்க நினைக்க மாட்டார். என் மேல் உள்ள பாசத்தில் அவர் எதையோ பேசப்போக அதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டீர்கள்'' என்று அந்த நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசி உள்ளார் நடிகர் சிவ ராஜ்குமார்.