என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தில் ஜுன் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக், ஆந்திர அரசு தரப்பிலிருந்து பவன் கல்யாண் சார்பாக எழுந்த விமர்சனத்தால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில் 'வாரிசு' படத் தயாரிப்பாளரான தில் ராஜு பெயர்தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. அதனால், அவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தை வாங்கி வினியோகிப்பதிலிருந்து தில் ராஜு விலகியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வரும்போது அவற்றை வாங்கி வினியோகம் செய்வார் தில் ராஜு.
தற்போது தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் வர வேண்டாமென்று அவர் விரும்புவதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் எது நடந்தாலும் அது பரபரப்பாகவே பேசப்படும் நிலை உள்ளது. 'ஹரிஹர வீரமல்லு' வெளியீட்டிற்குப் பிறகுதான் அது குறையும் வாய்ப்புள்ளது.