என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தின் காதல் கிசுகிசுவில் நீண்ட காலமாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்தாலும், இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடுவதில்லை. சுற்றுலா சென்றால் கூட ஒரே இடத்தில் இருந்தாலும் தனித்தனியாகத்தான் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள். மறைமுகமாகக் காதலை வெளிப்படுத்துபவர்கள் இன்னும் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் மறைத்து வருவதன் காரணம் தெரியவில்லை.
ராஷ்மிகா நேற்று பதிவிட்ட சில புகைப்படங்கள் அவர்களது காதல் கிசுகிசுவில் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் நிறப் புடவையில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா, “இந்தப் புகைப்படங்கள் எல்லாம் எனக்குப் பிடித்தமானவை. நிறம், சூழல், இடம், எனக்குப் புடவையை பரிசளித்த அழகான பெண்மணி, புகைப்படக் கலைஞர், இந்தப் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் எனக்கு ஈடு செய்ய முடியாதவை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ஒரு இரவுக்குள்ளாகவே 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அந்த புகைப்படக் கலைஞர் என்பவர் விஜய் தேவரகொண்டாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் புதிய தெலுங்குப் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.