நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

தெலுங்குத் திரையுலகத்தின் காதல் கிசுகிசுவில் நீண்ட காலமாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்தாலும், இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடுவதில்லை. சுற்றுலா சென்றால் கூட ஒரே இடத்தில் இருந்தாலும் தனித்தனியாகத்தான் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள். மறைமுகமாகக் காதலை வெளிப்படுத்துபவர்கள் இன்னும் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் மறைத்து வருவதன் காரணம் தெரியவில்லை.
ராஷ்மிகா நேற்று பதிவிட்ட சில புகைப்படங்கள் அவர்களது காதல் கிசுகிசுவில் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் நிறப் புடவையில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா, “இந்தப் புகைப்படங்கள் எல்லாம் எனக்குப் பிடித்தமானவை. நிறம், சூழல், இடம், எனக்குப் புடவையை பரிசளித்த அழகான பெண்மணி, புகைப்படக் கலைஞர், இந்தப் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் எனக்கு ஈடு செய்ய முடியாதவை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ஒரு இரவுக்குள்ளாகவே 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அந்த புகைப்படக் கலைஞர் என்பவர் விஜய் தேவரகொண்டாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் புதிய தெலுங்குப் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.




