விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா | கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க இருந்த ஜெயலலிதா | பிளாஷ்பேக்: ஏவிஎம் ஸ்டூடியோவில் உருவான முதல் படம் | கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்திற்கு தடை: கன்னட சினிமா வர்த்தக சபை முடிவு | 2வது படத்திலேயே மேக்அப் இல்லாமல் நடித்த ரோஷ்னி | புதுமுகங்களின் காதல் கதை |
தெலுங்குத் திரையுலகத்தின் காதல் கிசுகிசுவில் நீண்ட காலமாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்தாலும், இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடுவதில்லை. சுற்றுலா சென்றால் கூட ஒரே இடத்தில் இருந்தாலும் தனித்தனியாகத்தான் புகைப்படங்களைப் பதிவிடுவார்கள். மறைமுகமாகக் காதலை வெளிப்படுத்துபவர்கள் இன்னும் வெளிப்படையாக அதைச் சொல்லாமல் மறைத்து வருவதன் காரணம் தெரியவில்லை.
ராஷ்மிகா நேற்று பதிவிட்ட சில புகைப்படங்கள் அவர்களது காதல் கிசுகிசுவில் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் நிறப் புடவையில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா, “இந்தப் புகைப்படங்கள் எல்லாம் எனக்குப் பிடித்தமானவை. நிறம், சூழல், இடம், எனக்குப் புடவையை பரிசளித்த அழகான பெண்மணி, புகைப்படக் கலைஞர், இந்தப் புகைப்படத்தில் உள்ள அனைத்தும் எனக்கு ஈடு செய்ய முடியாதவை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ஒரு இரவுக்குள்ளாகவே 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அந்த புகைப்படக் கலைஞர் என்பவர் விஜய் தேவரகொண்டாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் புதிய தெலுங்குப் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.