பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா | விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை | ஜூலை இறுதியில் கூலி பாடல் வெளியீட்டு விழா | தலிபான்கள் ஒன்றும் இந்தப்பகுதியை ஆளவில்லையே? : கொந்தளிக்கும் சுரேஷ் கோபி பட இயக்குனர் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தக்லைப்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போர் நடைபெற்று வருவதால் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துள்ளார் கமல்.
அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், 'கொண்டாட்டத்திற்கான நேரம் இதுவல்ல. மவுன ஒருமைப்பாட்டிற்கான நேரம் என நம்புகிறேன். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் நாட்டின் பாதுகாப்புக்காக விழிப்புடன் இருந்து வரும் வீரர்கள் வீராங்கனைகள் மீது அமைதி எண்ணங்கள் செல்கிறது. நாட்டு மக்களாகிய நாமெல்லாம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நேரம். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல, சிந்தனைக்கான நேரம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.