என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் நடித்தவர் ஸ்வாசிகா. அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போகவே கேரளாவிற்கே சென்று விட்டார். தற்போது 'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார். இந்த படத்தின் வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அவர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூரியின் அக்காவாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஸ்வாசிகா பேசும்போது, "இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது.
தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாசார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும், கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும்.
படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். 'லப்பர் பந்து' படத்திற்குப் பிறகு 'மாமன்' படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.
கேரளாவில் தாய்மாமன்களுக்கான கலாசார உறவு இல்லை என்ற ஸ்வாசிகாவின் கருத்தை கேரள மீடியாக்கள் கடுமையாக விமர்சித்து வருகிறது. அங்குள்ள சமூக வலைதளங்களில் கேரள தாய்மாமன் உறவை பற்றிய தகல்களை வெளியிட்டு ஸ்வாசிகாவை விமர்சித்து வருகிறார்கள்.