இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் |
பழம்பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகன் அர்ஜூன். தமிழ் பட வாய்ப்புகள் தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்தபோது அவர் அதிகம் சந்தித்து வாய்ப்பு கேட்டது ராம.நாராயணனை பார்த்துதான். மற்றவர்கள் எல்லாம் 'சைனாகாரன் மாதிரி இருக்கிறான்' என்று விரட்டி விட்டபோது அவர்தான் அர்ஜூனை ஒரு நடிகராக ஏற்றார்.
1984ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த 'தாலியா பாக்யா' என்ற படத்தை தமிழில் 'நன்றி' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த கதையில் ஒரு வேலைக்காரன் பாத்திரம் முக்கியமானது. வாய்பேச முடியாத அந்த வேலைக்காரனை அந்த வீட்டு விதவை பெண் காதலிப்பதாக கதை. இந்த கேரக்டரில் அர்ஜூனை நடிக்க வைத்தார் ராம.நாராயணன். விதவை பெண்ணாக நளினி நடித்தார். அப்போது அர்ஜூனுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வராததால் அவரை பேச்சு திறனற்ற கேரக்டராக ராம நாராயணன் மாற்றினார் என்ற தகவலும் உண்டு.
இன்றைக்கு பல ஹீரோக்கள் சிக்ஸ்பேக் வைத்திருப்பதை பெருமையாக சொல்கிறார்கள். ஆனால் அர்ஜூன் தனது முதல் படத்திலேயே சிக்ஸ்பேக் வைத்து நடித்தார். இந்த படத்தின் நாயகன் கார்த்தி, நாயகி மகாலட்சுமி, வில்லன் சங்கிலி முருகன். சங்கர், கணேஷ் இசை அமைத்திருந்தனர், பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜன் தயாரித்ததோடு முக்கியமான கேரக்டர் ஒன்றிலும் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரவுனி என்ற நாய் முக்கிய கேரக்டரில் நடித்ததும், அதுவே படத்தின் வெற்றிக்கு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.