மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் சீரியல் மூலமாக பிரபலமானார். அடுத்து சினிமாவில் என்ட்ரி ஆகி மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. யானை, ருத்திரன், பொம்மை, ரத்னம், இந்தியன் 2 போன்ற படங்களில் அவர் நடிப்பும் விமர்சனம் செய்யப்பட்டது. இதனால், அவர் சற்றே விரக்தி ஆனார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி 2 படம், பிரியா பவானி சங்கருக்கு சந்தோஷத்தை தந்தது. படத்தின் வெற்றி அவரை உற்சாகம் அடைய வைத்தது. ஆனால் அடுத்த சில மாதங்கள் அவரை சினிமா நிகழ்ச்சியில், சென்னையில் பார்க்க முடியவில்லை. புதுப்படங்களிலும் கமிட்டாகவில்லை, அவருக்கு திருமணமாகிவிட்டது. வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று தகவல்கள் பரவின.
பிரியா பவானி சங்கருக்கு என்னாச்சு என்று விசாரித்தால் அவர் தனது காதலன் ராஜவேலை சந்திக்க ஆஸ்ரேலியா சென்றுவிட்டார். சில மாதங்கள் அங்கே இருந்தார். அதனால், சென்னையில் இல்லை. இப்போது திரும்பிவிட்டார். சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். மற்றபடி, அவரை பற்றி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை' என்கிறார்கள்.