மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மலையாளத்தில் 'குஞ்சிராமாயணம், கோதா மற்றும் மின்னல் முரளி' என மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் இயக்குனர் பசில் ஜோசப். இதில் மின்னல் முரளி திரைப்படம் இவரை பாலிவுட் வரை பேச வைத்தது. அதே சமயம் நட்புக்காக சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் காமெடியாக நடிக்க துவங்கிய இவர், தற்போது முழு நேர நடிகராக மாறி டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இவர் படங்களை தேர்வு செய்தாலும் பல படங்களில் வில்லத்தனம் கலந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அது மட்டுமல்ல,
கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் அதிக அளவு படங்களில் நடித்த ஹீரோ என்றால் இவராகத்தான் இருக்கும்.. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இவருக்கு 'மேன் ஆப் தி இயர்' என்கிற விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருது கிடைத்தது குறித்து அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “பசில் ஜோசப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. எங்களைப் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு படம் வெளியாகும்போது எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால் வீக்லி ஸ்டார் (வெள்ளிக்கிழமை நாயகன்) என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அவரது படம் வெளியாகிறது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.