'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
மலையாளத்தில் 'குஞ்சிராமாயணம், கோதா மற்றும் மின்னல் முரளி' என மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் இயக்குனர் பசில் ஜோசப். இதில் மின்னல் முரளி திரைப்படம் இவரை பாலிவுட் வரை பேச வைத்தது. அதே சமயம் நட்புக்காக சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் காமெடியாக நடிக்க துவங்கிய இவர், தற்போது முழு நேர நடிகராக மாறி டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இவர் படங்களை தேர்வு செய்தாலும் பல படங்களில் வில்லத்தனம் கலந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அது மட்டுமல்ல,
கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் அதிக அளவு படங்களில் நடித்த ஹீரோ என்றால் இவராகத்தான் இருக்கும்.. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இவருக்கு 'மேன் ஆப் தி இயர்' என்கிற விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருது கிடைத்தது குறித்து அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “பசில் ஜோசப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. எங்களைப் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு படம் வெளியாகும்போது எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால் வீக்லி ஸ்டார் (வெள்ளிக்கிழமை நாயகன்) என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அவரது படம் வெளியாகிறது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.