இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
வில்லிதிருக்கண்ணன் இயக்க, மகேஷ், வைஷ்ணவி நடிக்கும் ஆண்டவன் என்ற சின்ன பட்ஜெட் படத்தில் கலெக்டராக நடித்து இருக்கிறார் இயக்குனர் கே.பாக்யராஜ். அந்த படத்தில் ஏன் நடித்தேன் என்பதற்கான காரணத்தை பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்.
''தமிழகத்தில் ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது. கிராமங்களை காப்பாற்றுங்கள்'' என்ற கருவில் இந்த படம் உருவாகிறது. இன்றைக்கு கிராமங்களின் நிலவும் பிரச்னைகள். மக்கள் நகரத்துக்கு, வெளியிடங்களுக்கு ஏன் செல்கிறார்கள். கிராமங்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை இந்த படம் விவரிக்கிறது. பல நிஜ கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள நிலைமையை வீடியோவாக எடுத்து, சமூக அக்கறையுடன் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் பலரும் சென்றுவிட, ஒரு வைத்தியர் மட்டும் அங்கே இருக்கிறார். தன்னை நாடி வருபவர்கள் ஏமாறக்கூடாது என்ற நினைப்பில் கஷ்டத்தை அனுபவிக்கிறார். அவருக்கு வீடு கொடுக்கும், அவரை பாராட்டும் கலெக்டராக நான் நடித்து இருக்கிறேன். நான் அந்த சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று நிலைமையை பார்த்தேன். அங்குள்ள வீடுகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பல ஊர்களில், நகரங்களில், நாடுகளில் இருப்பார்கள் என்று ஒருவர் சொன்னார். அங்கே வேலை வாய்ப்பு இல்லாததால் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். சூழ்நிலைகளால், தங்கள் வாரிகளின் எதிர்காலம் கருதி சொந்த இடத்தை விட்டு பலர் செல்கிறார்கள். மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற கருவை இந்த படம் சொல்கிறது'' என்றார் கே.பாக்யராஜ்.