50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்தான் பாடத் திட்டங்களை வரையறை செய்து வருகிறது. சமீபத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள், டில்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுகுறித்து மாதவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "பள்ளியில் வரலாறு படித்தபோது முகலாயர்கள், ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகங்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர போராட்டத்தை பற்றி பல அத்தியாயங்கள் இருந்தன. ஆனாலும் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு அத்தியாயமே இருந்தது.
ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் நம்மை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் சோழ பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. நமது வரலாற்றின் அந்த பகுதி எங்கே? தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்று எங்கே போனது? உலகின் பழமையான மொழியான தமிழ் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாசாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு தற்போது கேலி செய்யப்பட்டு வருகிறது'', என்று தெரிவித்துள்ளார்.