பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் | தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கும் கன்னட ஹீரோயின்கள் |
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்தான் பாடத் திட்டங்களை வரையறை செய்து வருகிறது. சமீபத்தில் 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள், டில்லி சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுகுறித்து மாதவன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "பள்ளியில் வரலாறு படித்தபோது முகலாயர்கள், ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகங்கள், பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர போராட்டத்தை பற்றி பல அத்தியாயங்கள் இருந்தன. ஆனாலும் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு அத்தியாயமே இருந்தது.
ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் நம்மை 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் சோழ பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. நமது வரலாற்றின் அந்த பகுதி எங்கே? தமிழ் மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்று எங்கே போனது? உலகின் பழமையான மொழியான தமிழ் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாசாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு தற்போது கேலி செய்யப்பட்டு வருகிறது'', என்று தெரிவித்துள்ளார்.