நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. லடாக்கில் பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மாதவன் தற்போது லடாக்கில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டிருப்பதாவது: ''லடாக் வரும்போது எல்லாம் இதுபோன்று சிக்கிக் கொள்கிறேன். 2008ம் ஆண்டு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது பனிப்பொழிவில் சிக்கினேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் லே பகுதியில் சிக்கியுள்ளேன். இங்கு விமானங்கள் இல்லை.
கடந்த நான்கு நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமானங்கள் இல்லாததால் என்னால் ஊர் திரும்ப முடியவில்லை. விரைவில் வானம் தெளிவாகும். வீடு வந்து சேருவேன்", என்று குறிப்பிட்டுள்ளார்.