2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'கூலி' கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கி இருந்தது. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தியேட்டர்களில் கூலி படத்தை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் வசூலும் பாதித்தது. அதோடு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதிலும் சிக்கல் உள்ளது.
இந்தநிலையில் கூலி படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிடக்கோரி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
“தமிழ் படங்களில் சண்டை காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. இந்த படத்தில் மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டு உள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டு உள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளன. எனவே, கூலி படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்' என தயாரிப்பு வாதிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தணிக்கை குழு, “ஏ சான்றிதழை முதலில் ஏற்றுக்கொண்ட படக்குழு தற்போது 'யுஏ' சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்குவது என அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு 'யு/ஏ' சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்' என்று தெரிவித்தது.
இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.