திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
முனி, காளை, பரதேசி போன்ற படங்களில் நடித்தவர் வேதிகா. இப்போதும் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனாலும் பழைய தமிழ் பாடல்கள் மீது ஆர்வமாக இருக்கிறார். தன்னை சந்திக்க வரும் தமிழக நண்பர்களிடம் பல பழைய தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை பாடினார். இளையராஜாவின் சங்கத்தில் பாடாத கவிதை பாடலை ரசித்து பாடுகிறார்.
இது குறித்து கேட்டால் "எனக்கு பழைய தமிழ் பாடல்கள் மீது தனி காதல் உண்டு, அதை ரசித்து கேட்டு பாடுகிறேன். இதைவிட எனக்கு பெருமை நான் நடித்த காவியத்தலைவன் படத்தில் என் அறிமுக காட்சியில் அருணகிரிநாதர் பாடிய ஏவினை வேல் விழி மாதரை பாடலுக்கு, பரதநாட்டியம் ஆடி நடித்ததுதான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அந்த பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார். இன்றும் அந்த பாடலை முணுமுணுக்கிறேன். இயக்குனர் வசந்தபாலனுக்கு நன்றி. முனி படத்தில் நான் தான் ஹீரோயின், அந்தபடம் மூலமாகவே தமிழில் ஹாரர், காமெடி ஜானர் உருவானது. அந்த படம் சூப்பர் ஹிட். என்னை லக்கி ஹீரோயின் என லாரன்ஸ் மாஸ்டர் சொல்வார்" என்கிறார்.