ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

முனி, காளை, பரதேசி போன்ற படங்களில் நடித்தவர் வேதிகா. இப்போதும் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனாலும் பழைய தமிழ் பாடல்கள் மீது ஆர்வமாக இருக்கிறார். தன்னை சந்திக்க வரும் தமிழக நண்பர்களிடம் பல பழைய தமிழ் பாடல்களை பாடி அசத்துகிறார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை பாடினார். இளையராஜாவின் சங்கத்தில் பாடாத கவிதை பாடலை ரசித்து பாடுகிறார்.
இது குறித்து கேட்டால் "எனக்கு பழைய தமிழ் பாடல்கள் மீது தனி காதல் உண்டு, அதை ரசித்து கேட்டு பாடுகிறேன். இதைவிட எனக்கு பெருமை நான் நடித்த காவியத்தலைவன் படத்தில் என் அறிமுக காட்சியில் அருணகிரிநாதர் பாடிய ஏவினை வேல் விழி மாதரை பாடலுக்கு, பரதநாட்டியம் ஆடி நடித்ததுதான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அந்த பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார். இன்றும் அந்த பாடலை முணுமுணுக்கிறேன். இயக்குனர் வசந்தபாலனுக்கு நன்றி. முனி படத்தில் நான் தான் ஹீரோயின், அந்தபடம் மூலமாகவே தமிழில் ஹாரர், காமெடி ஜானர் உருவானது. அந்த படம் சூப்பர் ஹிட். என்னை லக்கி ஹீரோயின் என லாரன்ஸ் மாஸ்டர் சொல்வார்" என்கிறார்.




