காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்கில் உருவாகி உள்ள வெப்சீரிஸ் 'யக்ஷினி'. இதில் யக்ஷினி என்ற டைட்டில் ரோலில் வேதிகா நடித்துள்ளார். அவருடன் ராகுல் விஜய், லக்ஷ்மி மஞ்சு, அஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேஜா மர்னி என்பவர் இயக்கியுள்ளார். ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இதனை காணலாம்.
குபேரனிடம் சாபம் வாங்கும் மாயா எனும் யக்ஷினி அந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் அடைய வேண்டும் என்றால் 100 ஆண்களுடன் உறவு கொண்டு பின்னர் அவர்களை கொலை செய்ய வேண்டும். 99 பேரை கொல்லும் யக்ஷினி கடைசியாக 100வது ஆளாக ஹீரோவை சந்திக்கும் போது அவர் மீது காதல் வயப்படுகிறார். சாப விமோசனமா, காதலா இதில் யக்ஷினி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் தொடரின் கதை.
இந்த தொடர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வேதிகாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து வேதிகா கூறும்போது “அதிக சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கும்போது கூடுதல் பொறுப்பு இருக்கும். இந்தக் கேரக்டர் நீண்ட நேரம் உருவானாலும், படப்பிடிப்பின்போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. யக்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, எனக்கு உடல்ரீதியாக மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேக்கப் அணிந்து கலைக்க பல மணி நேரமானது. ஆனால், நான் செய்த முயற்சிகள் அனைத்துக்கும் இப்போது பாராட்டுகள் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.