Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி

08 ஏப், 2025 - 05:06 IST
எழுத்தின் அளவு:
Not-taking-a-risk-now...not-ever-Kavya-Arivumani-opens-up-about-her-cinema-entry


விஜய் டிவியில் ஹிட்டான சீரியல்களில் ஒன்றான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து பிரபலமானார். அவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், சீரியலின் 2ம் பாகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வந்தார். பின்னர் சீரியலில் இருந்து சினிமா வாய்ப்பை பெற்ற காவ்யா, 2022ல் 'மிரள்', 2023ல் 'ரிப்பப்பரி' ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.

தற்போது நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த 'நிறம் மாறும் உலகில்' படத்திலும் நடித்தார். அடுத்ததாக கவின் - நயன்தாரா நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அப்படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படம் இளைஞர்களை இணைக்கும் வகையிலான கதையை கொண்டது. சீரியலில் நடித்துவந்தபோதே கவினை தெரியும். அவருடன் பணிபுரிவது கலகலப்பாக இருக்கும்.

நான் நயன்தாரா உடன் நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டதில்லை. அவருடன் நடிப்பதை ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்திற்கு வருவதும், தொழில்ரீதியாக வேலை செய்வதும் என இருக்கிறார். வேறு எந்த விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை.

என் பள்ளி மேடை நாடகங்களில் நான் மோனோ நடிப்பு செய்து வந்தேன். அப்போது பலரும் என்னிடம் வந்து, 'நீ ஏன் நடிப்பை தொடரக்கூடாது' என கேட்பார்கள். சினிமா பின்னணி இல்லாமல், சென்னைக்கு தனியாக வந்தேன், நிறைய முயற்சித்தேன். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு யூடியூப்பில் சில குறும்பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு, 'பாரதி கண்ணம்மா' சீரியலில் வாய்ப்பு கிடைத்தது, பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய வேடத்தில் நடித்தேன்.

சீரியல்களில் நடிக்கும் போது பட வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் தேதி பிரச்னைகள் காரணமாக அவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது ரிஸ்க் எடுத்து சீரியலில் இருந்து விலகவில்லை என்றால் ஒரு பெட்டிக்குள் சிக்கிக்கொள்வது போல் ஆகிவிடும் என எண்ணி, சீரியிலில் விலகி சினிமாவில் எண்ட்ரி ஆனேன். டிவி தொடர்களில் இருந்து திரைப்படங்களுக்கு மாறுவது எளிதானது அல்ல, ஏனெனில் நீங்கள் பொருளாதார ரீதியாக நிறைய போராட்டங்களைச் சந்திப்பீர்கள். படங்களில் நடிக்க, நாம் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கு நமக்கு பணம் தேவை. சீரியலில் நடிக்கும்போது கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைத்திருந்தேன், அதன் மூலம் என்னை நானே வளர்த்துக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்?த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in