கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை |
கமல்ஹாசனும், இயக்குனர் ஆர்.சி.சக்தியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு நடன கலைஞரை பற்றி படம் எடுக்க விரும்பினர். இதற்காக ஆர்.சி.சக்தி திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் நடன பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் தெலுங்கு இயக்குனரான கே.விஸ்வநாத் இதுபோன்ற ஒரு கதையுடன் கமல்ஹாசனை சந்தித்தார். இந்த கதை கமலுக்கு பிடித்துவிடவே ஒப்புக் கொண்டார். படத்திற்கு முதலில் 'அனுபல்லவி' என்று பெயரிட்டனர்.
கமல்ஹாசன் அடிப்படையில் நடன கலைஞர் என்றாலும் இந்த படத்திற்காக அவர் கதகளி, குச்சுபுடி, பரதநாட்டியம், ஆகியவற்றை முறைப்படி ஆட வேண்டும். இதனால் கமல்ஹாசன் மற்ற படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கோபி கிருஷ்ணா மாஸ்டரிடம் ஒரு மாதம் கடுமையான நடன பயிற்சி பெற்றார்.
பின்னர் படத்தின் தலைப்பு குறித்து விவாதித்தனர். படம் நாட்டிய கலையை பின்னணியாக கொண்டது. 'அனுபல்லவி' என்பது ராகத்தின் பெயர், அதனால் நாட்டியத்தோடு தொடர்புடைய பெயரை வைக்க முடிவு செய்தனர். அதன்படி 'சலங்கை ஒலி' என்ற பெயர் முடிவானது. 'சாகர சங்கமம்' என்று தெலுங்கு, மற்றும் மலையாள பதிப்புக்கு டைட்டில் வைக்கப்பட்டது.
கமலின் நடன திறமை, ஜெயபிரதாவின் நடிப்பு, இளையராஜவின் இசை அனைத்தும் படத்தை காவியம் ஆக்கியது. 3 மொழிகளிலும் இளையராஜாவின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. மூன்று மொழிகளிலும் படம் வெள்ளி விழா கொண்டாடியது.