இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
கமல்ஹாசனும், இயக்குனர் ஆர்.சி.சக்தியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு நடன கலைஞரை பற்றி படம் எடுக்க விரும்பினர். இதற்காக ஆர்.சி.சக்தி திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் நடன பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் தெலுங்கு இயக்குனரான கே.விஸ்வநாத் இதுபோன்ற ஒரு கதையுடன் கமல்ஹாசனை சந்தித்தார். இந்த கதை கமலுக்கு பிடித்துவிடவே ஒப்புக் கொண்டார். படத்திற்கு முதலில் 'அனுபல்லவி' என்று பெயரிட்டனர்.
கமல்ஹாசன் அடிப்படையில் நடன கலைஞர் என்றாலும் இந்த படத்திற்காக அவர் கதகளி, குச்சுபுடி, பரதநாட்டியம், ஆகியவற்றை முறைப்படி ஆட வேண்டும். இதனால் கமல்ஹாசன் மற்ற படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கோபி கிருஷ்ணா மாஸ்டரிடம் ஒரு மாதம் கடுமையான நடன பயிற்சி பெற்றார்.
பின்னர் படத்தின் தலைப்பு குறித்து விவாதித்தனர். படம் நாட்டிய கலையை பின்னணியாக கொண்டது. 'அனுபல்லவி' என்பது ராகத்தின் பெயர், அதனால் நாட்டியத்தோடு தொடர்புடைய பெயரை வைக்க முடிவு செய்தனர். அதன்படி 'சலங்கை ஒலி' என்ற பெயர் முடிவானது. 'சாகர சங்கமம்' என்று தெலுங்கு, மற்றும் மலையாள பதிப்புக்கு டைட்டில் வைக்கப்பட்டது.
கமலின் நடன திறமை, ஜெயபிரதாவின் நடிப்பு, இளையராஜவின் இசை அனைத்தும் படத்தை காவியம் ஆக்கியது. 3 மொழிகளிலும் இளையராஜாவின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. மூன்று மொழிகளிலும் படம் வெள்ளி விழா கொண்டாடியது.