Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: சுதந்திரத்திற்கு முன்பே அதை கொண்டாடிய படம்

17 மார், 2025 - 02:50 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-film-that-celebrated-independence-before-it-was-born

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதாவது 1947ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியான படம் நாம் இருவர். இந்த படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கினார். இவர் இயக்கிய கடைசி படமும் இதுதான். இந்த படத்தின் பெரிய வெற்றியால் தனது ஸ்டூடியோவை காரைக்குடியில் இருந்து சென்னைக்கு மாற்றினார்.

இந்திய சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நேரத்தில் நாட்டுப்பற்று உணர்ச்சிமிக்க கதையைத் தேடிக்கொண்டிருந்தார் மெய்யப்ப செட்டியார். என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவினர் நடத்தி வந்த 'தியாக உள்ளம்' என்ற நாடகம் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. எனவே அந்த நாடகத்தின் உரிமையை வாங்கி 'நாம் இருவர் ' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தார். நாடகத்தில் நாயகனாக நாடகத்தில் நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தையே படத்திலும் நாயகனாக்க ஒப்பந்தம் செய்தார்.

அந்த நேரத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிக்கியிருந்ததால் அவரின் நாடகக்குழுவை ஏற்று நடத்தும் முழு பொறுப்பும் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தோளில் விழுந்தது. இதனால் நாம் இருவர் படத்தில் அவர் நடிக்க இயலவில்லை. நிலமையை உணர்ந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.மகாலிங்கத்தை படத்தில் நாயகனாக்கினார். நாயகியாக டி.ஏ.ஜெயலட்சுமி நடித்தார்.

இவர்களுடன் பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி பேபி கமலா, டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆர்.சுதர்சன் இசை அமதை்து இருந்தார் . தேசபக்தி மிகுந்த பாரதியாரின் பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றது.

பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் திரைப்பட தயாரிப்பில் இறங்கி பெரும் கடனில் சிக்கி பின்பு அதிலிருந்து மீண்டு கடைசியில் காந்தியவாதி ஆவது மாதிரியான கதை. பாரதியார் விழாவுடன் தொடங்கும் படம் காந்தியின் பிறந்த நாளுடன் முடியும், பாரதியாரின் எழுச்சி மிகுந்த பாடல்கள், தேசப்பற்று மிக்க உரையாடல்கள் மூலம் சுதந்ததிரமடைவதற்கு முன்பே சுதந்திரத்தை கொண்டாடிய படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம்பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ... பிளாஷ்பேக் : 'சலங்கை ஒலி' ஆன அனு பல்லவி பிளாஷ்பேக் : 'சலங்கை ஒலி' ஆன அனு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in