பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் |
கார்த்தி நடிப்பில் கடைசியாக ‛மெய்யழகன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அவருடன் அரவிந்த்சாமி நடிக்க, பிரேம் குமார் இயக்கினார். இந்த படத்திற்கு பின் தற்போது ‛வா வாத்தியாரே' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் கைதி 2 படமும் அவர் கைவசம் உள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு கதையை கார்த்தியிடம் சொல்லி உள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதாம். இதனால் படம் அடுத்தக்கட்டம் நோக்கி நகர துவங்கி உள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தான் கவுதம் மேனன் படமாக்க உள்ளாராம். வழக்கமான கவுதம் மேனன் ஸ்டைலில் ஆக் ஷன் படமாக இது உருவாகிறது.