வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பொதுவாக மலையாள படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை. காரணம் தமிழ் மக்களுக்கு மலையாளம் எளிதில் புரியும் என்பதால். பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். மற்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும்போது தமிழிலும் வெளியாகும். தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆபீசர் ஆன் டூட்டி' என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (மார்ச் 14) வெளியாகிறது. இந்த படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
போலீஸ் கிரைம் திரில்லர் படமான இதில் குஞ்சாகோ போபன் போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். அவரது மனைவியாக பிரியாமணி நடித்துள்ளார். இவர்கள் தவிர ஜெகதீஷ், விஷாக் நாயர், மீனாட்சி அனூப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜித்து அஷ்ரப் இயக்கி உள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், ரூபி வர்கீஸ் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.