இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
1980களில் பரவலாக பேசப்பட்ட பெயர் சிறுமுகை ரவி. 25 வருடங்களுக்கும் மேலாக நாடகத்துறையில் பழுத்த அனுபவம் கொண்டவர். 18 வயதிலிருந்தே மேடை நாடகங்கள் எழுதி, நடித்து, இயக்கியும் வந்தவர். இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார் இவர். சொந்தமாக நாடகக் குழுவும் வைத்திருந்தார்.
மணிவண்ணன் இயக்கிய 'இளமை காலங்கள்' படத்தின் கதை இவர் எழுதியது. 'உறவுக்கு ஒருத்தி, மலர்களிலே அவள் மல்லிகை' படங்களுக்கு வசனம் எழுதினார். இவர் இயக்கிய முதல் படம் 'ராகங்கள் முடிவதில்லை'. தன்னை வலுக்கட்டாயமாக காதலித்து, திருமணம் செய்து கொண்டவனை அவன் மனைவியாகவே இருந்து கொண்டு பழிவாங்கும் நாயகியின் கதை. பிரபு அம்பிகா நடித்திருந்தார்கள். ஆனால் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் 'பூவே இளம் பூவே, அலை ஓசை, அசோக் நகர்' உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ஆனால் எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் சினிமாவில் இருந்து விலகினார். என்றாலும் கடைசி வரை சினிமாவிற்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். பலரை சினிமாவில் நடிகராக, இயக்குனராக ஆக்கியவர் இவர் என்று சொல்வார்கள்.