Advertisement

சிறப்புச்செய்திகள்

60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான் | இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் | கார் தவணை கூட கட்டமுடியாத கஷ்டம்! ஆனால் இப்போது? | ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ரஜினி பெயரில் ஒரு நடிகை

13 மார், 2025 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Flashback:-An-actress-named-Rajini


சிவாஜிராவ் கெய்க்வாட் கே.பாலச்சந்தரால் ரஜினிகாந்த் ஆனார். ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். ஆனால் ரஜினி என்ற பெயர் சினிமாவிற்கு புதிதல்ல. 1940களின் இறுதி பகுதியில் ரஜினி என்ற பெயரில் ஒரு நடிகை இருந்தார்.

புதுக்கோட்டையை சேர்ந்த மேடை நடன கலைஞர் இவர். இயற்பெயர் கோவிந்தம்மாள். ஆனால் இந்த பெயரை ராஜாபாலா என்று மாற்றிக் கொண்டு சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானார். பல படங்களில் குரூப் நடனங்களில் ஆடினார். தமிழ், தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

அந்த காலத்தில் ஒரு ஹேர் ஆயில் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்தார். பிளவுஸ் அணியாமல் நீண்ட தலைமுடியுடன் அவர் கொடுத்த போஸ் பிரபலமானது. தமிழகம் முழுக்க அந்த விளம்பர போர்ட் அமைக்கப்பட்டது. அதன் மூலம் பிரபலமான அவர் 'மதனமாலா' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்போது தனது பெயரை ரஜினி என்று மாற்றிக் கொண்டார். இந்த படத்தில் அவர் நடன கலைஞராகவே நடித்தார்.

மன்னரின் அரசவை நாட்டியக்காரி மதனமாலா. அந்த அரசவைக்கு வரும் கவிஞர் விக்ரமன் என்பவர் மன்னனை புகழ்ந்து பாடுகிறார். அந்த பாடலுக்கு மதனமாலா நடனம் ஆடுகிறார். பாடல் முடிந்ததும் மகிழ்ந்துபோன மன்னர் என்ன வேண்டும் கேள் என்று விக்ரமனை கேட்கிறார். அதற்கு அவர் மதனமாலா என் மனைவியாக வேண்டும் என்கிறார். இதனால் கோபம் அடையும் மன்னர், விக்ரமனை நாடு கடத்துகிறார். மதனமாலாவை தனது ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள மன்னர் திட்டமிடுகிறார். நாடு கடத்தப்பட்ட விக்ரமன் எப்படி மதனமாலாவை மனைவியாக அடைகிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் வெற்றி பெற்றாலும் ரஜினிக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இரண்டாவது நாயகி, குணசித்ர வேடங்களில் நடித்தார். சென்னை புரசைவாக்கத்தில் நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளராக மீண்டும் வெற்றி பெறுவாரா யுவன்?தயாரிப்பாளராக மீண்டும் வெற்றி ... பிளாஷ்பேக்: நாடகத்தில் ஜெயித்து சினிமாவில் தோற்ற சிறுமுகை ரவி பிளாஷ்பேக்: நாடகத்தில் ஜெயித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சசிக்குமார் திருப்பூர் ரஜினியின் சந்திரமுகி கதை மாதிரி இருக்கிறதே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in