நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகி மோகன்லாலை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வழியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் சில காட்சிகளையும் நீக்கும்படியும் மாற்றும்படியும் சென்சார் அதிகாரிகள் வலியுறுத்திய தகவலும் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் தேசியக் கொடியின் நிறங்கள் குறித்து பேசப்படும் ஒரு வசனத்தை நீக்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது வசனத்தை மியூட் செய்யவோ சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்ல படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தலையை பலமுறை சுவற்றில் மோதி தாக்குவது போன்ற காட்சியின் நீளத்தை குறைக்கும்படியும் கூறியுள்ளது.