500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் | தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! - ஜோதிகா வெளியிட்ட தகவல் | இந்த வாரமும் இத்தனை படங்களா ? தூங்கும் சங்கங்கள்… | பிளாஷ்பேக்: பானுமதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சாவித்திரி நடித்து வெற்றியை பதிவு செய்த “மிஸ்ஸியம்மா” |
தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை வியாபார எல்லை மற்றும் வசூல் ரீதியாக கர்நாடக திரையுலகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ரொம்பவே பின்தங்கி இருந்தது. சமீபவருடங்களாக கேஜிஎப் மற்றும் காந்தாரா உள்ளிட்ட படங்களின் அதிரடி வருகை காரணமாக கன்னட சினிமாவும் தற்போது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் அதிகப்படியான தியேட்டர் கட்டணங்கள் படங்களின் வசூலை, படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கின்றன என்கிற குற்றச்சாட்டு ரொம்ப நாளாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கர்நாடக அரசு பட்ஜெட்டில் இனி எந்த தியேட்டரிலும் டிக்கெட் விலை நிர்ணயம் 200 ரூபாய்க்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும் அதிகப்படியாக வசூலிக்கப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஓடிடி தளங்களும் கன்னட படங்களை வாங்குவதற்கு இப்போதும் பெரிய அளவில் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் அந்த படங்களுக்கு வர வேண்டிய வருமானம் பாதிக்கப்படுகிறது. பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித் செட்டி தனது சொந்த தயாரிப்புகளை ஓடிடியில் விற்பதற்கு சிரமப்பட்டதால் தனியாகவே ஓடிடி களம் ஒன்றை ஆரம்பித்து விட்டார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக கன்னட திரைப்படங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்வதற்கும் தயாரிப்பாளர்களின் நலனை கருதியும் கர்நாடக அரசே புதிய ஓடிடி தளத்தையும் துவங்க உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கன்னட திரையுலகினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.