ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
‛அமரன்' படத்தை அடுத்து ஹிந்தியில் ‛ஏக் தின்' என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது ‛ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸின் ‛கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த தீபிகா படுகோனே அப்படத்திலிருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கல்கி- 2 படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவி இடத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், கல்கி- 2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு தொடங்கும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.