'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
தமிழ் சினிமாவில் மலையாள தேசத்து நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை போன்று மலையாள தேசத்து பாடகிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சின்னகுயில் சித்ரா, ஜென்ஸி போன்ற பல பாடகிகள் மலையாளத்தை விட தமிழிலேயே அதிகம் பாடி இருக்கிறார்கள். இந்த ஆதிக்கம் இப்போதல்ல 1940ளிலிருந்தே தொடங்குகிறது. இந்த காலத்தில் வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடி வருவதை போன்று அந்தக் காலத்தில் பாடியவர் வைக்கம் சரஸ்வதி.
கேரளாவில் மேடையில் கர்நாடக இசை பாடி வந்தவர் சரஸ்வதி. ஆல் இண்டியா ரேடியோவின் ஆஸ்தான பாடகியாகவும் இருந்தார். இவரது பாடல்கள் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தது. 1938ம் ஆண்டு வெளிவந்த 'நந்தகுமார் ' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு 'ஸ்ரீவள்ளி' படத்தில் பாடினார். 'தன அமராவதி' உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும் ஏனோ தமிழில் தொடர்ந்து பாடவில்லை. மலையாள பாடல்களிலும், கர்நாடக இசை கச்சேரிகளிலுமே அதிக ஆர்வம் செலுத்தினார். இவரது சகோதரர்தான் மலையாள சினிமாவின் முன்னணி பாடகரான ராஜன்.