பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் |
பாலிவுட்டில் கடந்த வாரம் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த சாவா என்கிற திரைப்படம் வெளியானது. சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜி மன்னனின் வாழ்க்கை வரலாறை தழுவி வரலாற்று படமாக இது உருவாகி இருந்தது. சாம்பாஜி மன்னனாக விக்கி கவுசலும் அவரது மனைவி ஏசுபாயாக ராஷ்மிகாவும் நடித்திருந்தனர். லக்ஷ்மன் உடேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது சத்ரபதி சிவாஜியின் 395வது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜியின் வரலாற்றை பற்றி, அவர் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் பற்றி உருவாகி இருக்கும் சாவா திரைப்படத்திற்கு வரி விளக்கு அளிப்பதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார் இதனால் படக்குழுவினர் உற்சாகமரிந்துள்ளனர்.
அதே சமயம் இந்த படம் வெளியாவதற்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் பாடல் டீசர் ஒன்றில் சாம்பாஜி மன்னன் ஆடிப் பாடுவதாக ஒரு காட்சி இடம் பெற்றது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அந்த காட்சியை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டிய இருக்கும் என்று மகாராஷ்டிரா அரசு கடுமை காட்டிய நிலையில் தற்போது இன்னொரு மாநிலமான மத்திய பிரதேச அரசு இந்த படத்திற்கு வரி விளக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.