யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
1980களில் பிசியாக இருந்த ஹீரோயின்களில் முக்கியமானவர்கள் ராதா, சுஹாசினி, ஊர்வசி. ராதா இளமை ததும்பும் காதல் படங்களிலும், சுஹாசினி, ஊர்வசி குடும்ப பாங்கான படங்களிலும் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் மூவருமே அதிரடி ஆக்ஷன் ஹீரோயின்களாக நடித்த படம் 'அபூர்வ சகோதரிகள்'.
1983ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் 3 ஹீரோயின்களுடன் கார்த்திக், சுரேஷ், ஜெய் சங்கர், கே.ஆர்.விஜயா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தியாகராஜன் இயக்கி இருந்தார். பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பிலஹரி இசை அமைத்திருந்தார்.
ஜெய்சங்கர், கே.ஆர் விஜயா தம்பதிகளுக்கு 3 மகள்கள். எதிரிகளின் சதியால் ஜெய்சங்கர் ஜெயிலுக்கு போக, கே.ஆர்.விஜயா இறந்து விட சகோதரிகள் மூவரும் திசைக்கு ஒருவராக பிரிந்து விடுகிறார்கள். பிற்காலத்தில் சுஹாசினி போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார், ராதா திருடி ஆகிறார், ஊர்வசி கிளப் டான்சராகிறார். இந்த மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் கலர்புல் பாடல் காட்சிகள், இந்தி பாடல்கள் பாணியிலான மெட்டுகளில் பாடல்கள், ஹீரோயின்கள் போடும் அதிரடியான சண்டை காட்சி என படம் பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக வெளிவந்து வெற்றி பெற்றது.