இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
'பாரத ரத்னா' விருது பெற்ற கர்நாடக இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி. ஆரம்ப காலகட்டங்களில் அவர் சேவாதனம், சகுந்தலை, சாவித்ரி, மீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவரது வளர்ப்பு மகள் ராதா விஸ்வநாதன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவத்தின் முதல் மனைவி அபிதகுஜலாம்பாளின் மகள். அபியின் மரணத்திற்கு பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் ராதாவை வளர்த்தார்.
நாட்டியத்திலும், கர்நாடக சங்கீதத்திலும் சிறந்து விளங்கிய ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் வீணை வாசித்தார். அவருடன் இணைந்தும் பாடியும் உள்ளார். 'மீரா' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இளம் வயது மீராவாக நடித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மிகவும் புகழ்பெற்ற படம் இது.
இந்த படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மீராவாக நடித்தார், சித்தூர் நாகய்யா ரானாவாக நடித்தார், செருகளத்தூர் சாமா ரூபா கோஸ்சுவாமியாக நடித்தார். இதில் ராதா, மீராவின் இளம் வயது கேரக்டரில் நடித்தார். இதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அதன் பிறகு சினிமாவில் நடிக்க மறுத்து விட்டார். இறுதிவரை தனது தாயின் இசை பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராதா, தனது 83வது வயதில் பெங்களூருவில் காலமானார்.