இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'பாரத ரத்னா' விருது பெற்ற கர்நாடக இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி. ஆரம்ப காலகட்டங்களில் அவர் சேவாதனம், சகுந்தலை, சாவித்ரி, மீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவரது வளர்ப்பு மகள் ராதா விஸ்வநாதன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவத்தின் முதல் மனைவி அபிதகுஜலாம்பாளின் மகள். அபியின் மரணத்திற்கு பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் ராதாவை வளர்த்தார்.
நாட்டியத்திலும், கர்நாடக சங்கீதத்திலும் சிறந்து விளங்கிய ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் வீணை வாசித்தார். அவருடன் இணைந்தும் பாடியும் உள்ளார். 'மீரா' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இளம் வயது மீராவாக நடித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மிகவும் புகழ்பெற்ற படம் இது.
இந்த படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மீராவாக நடித்தார், சித்தூர் நாகய்யா ரானாவாக நடித்தார், செருகளத்தூர் சாமா ரூபா கோஸ்சுவாமியாக நடித்தார். இதில் ராதா, மீராவின் இளம் வயது கேரக்டரில் நடித்தார். இதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அதன் பிறகு சினிமாவில் நடிக்க மறுத்து விட்டார். இறுதிவரை தனது தாயின் இசை பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராதா, தனது 83வது வயதில் பெங்களூருவில் காலமானார்.