விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
'பாரத ரத்னா' விருது பெற்ற கர்நாடக இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி. ஆரம்ப காலகட்டங்களில் அவர் சேவாதனம், சகுந்தலை, சாவித்ரி, மீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவரது வளர்ப்பு மகள் ராதா விஸ்வநாதன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவத்தின் முதல் மனைவி அபிதகுஜலாம்பாளின் மகள். அபியின் மரணத்திற்கு பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் ராதாவை வளர்த்தார்.
நாட்டியத்திலும், கர்நாடக சங்கீதத்திலும் சிறந்து விளங்கிய ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் வீணை வாசித்தார். அவருடன் இணைந்தும் பாடியும் உள்ளார். 'மீரா' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இளம் வயது மீராவாக நடித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மிகவும் புகழ்பெற்ற படம் இது.
இந்த படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மீராவாக நடித்தார், சித்தூர் நாகய்யா ரானாவாக நடித்தார், செருகளத்தூர் சாமா ரூபா கோஸ்சுவாமியாக நடித்தார். இதில் ராதா, மீராவின் இளம் வயது கேரக்டரில் நடித்தார். இதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அதன் பிறகு சினிமாவில் நடிக்க மறுத்து விட்டார். இறுதிவரை தனது தாயின் இசை பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராதா, தனது 83வது வயதில் பெங்களூருவில் காலமானார்.