படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
கடந்த ஆண்டில் மலையாளத்தில் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்து வெளிவந்த படம் 'மார்கோ'. இப்படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க ஆக்சன் படமாக வெளியாகி உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏற்கனவே மார்கோ 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளனர்.
தற்போது உன்னி முகுந்தன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "இந்தியாவின் அதீத வன்முறையான ஆக்சன் படம் என்பதை நாங்கள் வெளிப்படையாக கூறி விளம்பர படுத்தியது கூட அதற்கான ரசிகர்களிடம் சென்றடையும் என்பதால் தான். அதனால் மார்கோ படத்திற்கான ரசிகர்கள் அடுத்த பாகத்திற்கு என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்பதையெல்லாம் சரியாகக் கணித்து பிரஷரை ஏற்றிக் கொள்ளாமல் மார்கோ 2 கதையை உருவாக்க வேண்டும். அதற்காக முழு உழைப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். " என தெரிவித்துள்ளார்.