இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஒரு படத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைமாக்ஸ் வைத்து ரசிகர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அந்த கிளைமாக்சோடு படத்தை வெளியிடுவது பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு வழக்கம். இதுவும் அபூர்வமாகத்தான் நடக்கும். குறிப்பாக கே.பாக்யராஜ், மணிரத்னம் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழில் இதனை தொடங்கி வைத்த படம் 'மஹாமாயா' (1944).
பிற்காலத்தில் பஞ்சு அருணாசம், ஆர்.செல்வராஜ், சுஜாதா போன்று அந்தக் காலத்தில் திரைப்பட நட்சத்திர எழுத்தாளராக இருந்தவர் இளங்கோ. அன்றைய முன்னணி நட்சதத்திரங்களான தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருக்கு ஆஸ்தான எழுத்தாளராக இருந்தார். இளங்கோவின் கதை என்றால் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பார்கள்.
அப்படிப்பட்ட இளங்கோ எழுதிய கதைதான் 'மஹாமாயா'-. இதை எழுதுவதற்கு அவர் ஒரு வருடம் எடுத்துக் கொண்டார். கதையை எழுதி முடித்ததும் அதற்கு மூன்று கிளைமாக்சை எழுதினார். அதனை தயாரிப்பாளர் எம்.சோமசுந்தரம், இயக்குனர் டி.ஆர்.ரகுநாத்திடம் கொடுத்தார். அவர்களுக்கும் எந்த கிளைமாக்சை வைப்பது என்பதில் குழப்பம். இதனால் மூன்று கிளைமாக்சையும் படமாக்கி, பிறகு அதனை ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், திரையுலகினருக்கும் போட்டு காட்டி பெரும்பாலானவர்கள் சொன்ன கிளைமாக்சையே படத்தில் வைத்தார்கள்.
மன்னரின் வாளில் எந்த பெண்ணாவது மாலை அணிவித்து விட்டால் அந்த பெண் மன்னருக்கு சொந்தம் என்பது பொதுவான நியதி. மன்னர் பி.யு.சின்னப்பா வாளுக்கு மஹாமாயாவான கண்ணாம்பா விளையாட்டாக மாலை அணிவித்து விடுகிறார். அப்போது அது விளையாட்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கண்ணாம்பாவுக்கு திருமணமான பிறகு அவரது அழகில் மயங்கும் சின்னப்பா வாளுக்கு மாலையிட்டதால் அவர் எனக்கே சொந்தம் என்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்த படத்தில் பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, எம்.ஜி.சக்ரபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், டி.பாலசுப்ரமணியம், எஸ்.வி. சஹஸ்ரநாமம், எம்.கே.மீனலோச்சனி, 'பேபி' டி.டி.குசலாம்பாள், டி.ராஜ்பாலா மற்றும் டி.ஆர்.பி.ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.