டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் விடாமுற்சி, 'பிரேக்டவுன்' என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று ரசிகர்கள் கணித்து சொல்லிவிட்டார்கள். ஹாலிவுட்டோ, கொரியனோ எந்த மொழி படத்தை காப்பி அடித்தாலும் ரசிகர்கள் கண்டுபிடித்து அதை வெட்டவெளிச்சமாக்கி விடுவார்கள். காரணம் இப்போது அவர்கள் ஓடிடி தளங்கள் மூலம் உலக படங்களை பார்த்து வருகிறார்கள். சினிமா பற்றிய தேடலும் அதிகம். ஆனால் அந்த காலத்தில் அப்படியில்லை ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கி சான் படங்கள் முக்கியமான சில படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகும். அதுவும் ஆங்கிலத்தில்தான் வெளியாகும்.
இப்படியான காலகட்டத்திலேயே சிவாஜி நடிப்பில் வெளியான 'கருடா சௌவுக்யமா' என்ற படம் ஹாலிவுட்டில் வெளியான 'காட்பாதர்' படத்தின் தழுவல் என்று கண்டுபிடித்து சொல்லிவிட்டார்கள். கதைப்படி சிவாஜி பகலில் ஒரு அச்சகம் நடத்துவார், இரவில் ஊழல் செய்து சேர்த்து வைத்திருப்பவர்களின் வீட்டுக்குள் புகுந்து அதை கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு கொடுத்து விட்டு வருவார். இது அவரது குடும்பத்துக்கே தெரியாது. தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
'காட்பாதர்' படத்தின் மைய கருதான் இந்த படத்தின் கதை. மற்றபடி திரைக்கதை நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிவாஜியுடன் சுஜாதா, தியாகராஜன், அம்பிகா, மோகன், ராஜலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். வியட்நாம் வீடு சுந்தரம் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார், கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார்.




