இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', அஜித்குமாரின் 'என்னை அறிந்தால்', விஜய்யின் 'தி கோட்' படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தமிழை விட மலையாளத்தில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இவர்கள், காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பார்வதி நாயர், 'ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும், நீங்கள் என்னுடன் நின்றீர்கள். இன்று, வாழ்நாள் முழுவதும் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் ஆம் என்று சொல்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்தப் பயணம் ஒரே மாதிரியாக இருக்காது' எனவும் பதிவிட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட சடங்குகள் நடக்கிறது. அசோக், சென்னையில் தொழிலதிபராக இருந்தாலும், அவரது பூர்வீகம் ஹைதராபாத் என தெரியவந்துள்ளது. பார்வதி கேரளாவையும், அசோக் ஹைதராபாத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் இருவரும் தங்களது திருமணத்தை சென்னையில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இவர்களது திருமணம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறுகிறது. திருமணத்தை அடுத்து கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.